மல்லி....தேவதைகளின் பூவிது...!!

சிறு வயது முதலே....மல்லிப்பூ பிடிக்கும்....
மல்லிபூவேய்.....!!!
தெருக்களில் எதிரொலிக்கும் அவன் அடித்தொண்டை குரல்...!!
அம்மா கூப்பிட சொன்னவுடன்....ஓடிபோய் வாசலில் நின்று கொண்டு ...
'ஏய்...மல்லிபூவேய்'.....என்று அதே அடித்தொண்டையில் கிண்டல்
தொனிக்க கத்துவதும் பிடிக்கும்...!!!

அரும்பு மீசை அரும்பும் போதே....அரும்பும் மல்லி மீது ஆசை...!!

என்னவளின் தலைமேல் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு போகையில் ......என்னை பார்த்து கேலி செய்வது போல்
ஒரு மாயை...!! கருவி கொள்வேன் எனக்குள் ....இருடி இரு....ஒரு நாள் நானும்...!!!

காதலிக்கும் போது....கீழே உதிரும் அவளின் .....ஒற்றை
மல்லியை..திருட்டுத்தனமாய்.....பாட புத்தகத்தில் பாடம் பண்ணி வைத்தது
மனப்பாடமாய் இன்றும்...

மாற்றான் தோட்டத்து மல்லி ஆனபின்னும்
தலை குனிந்து மௌனித்து விட்டு சென்றாள்....
தலை
நிறைய மல்லியுடனும் கண் நிறைய கண்ணீருடனும்......
முதலை கண்ணீரை முதன் முதலாய் நேரில் பார்க்கின்றேன்.......
அப்போதும் மல்லி என்னை பார்த்தது.....இப்போது கொஞ்சம் அனுதாபத்துடன்......!!
முதன்முதலாய் தோன்றியது.....மல்லி தேவ அடியாளின் பூவோவென்று.....!!

காலம் காலில் சக்கரம் கட்டி ஓடியது........கூடியது....மல்லியுடனான என் மயக்கம் மட்டும்...

கல்யாணம் ஆன பின்னே ஒரு தேவதை என் முன்னே வந்து நின்றது......என் மல்லியுடன்.....
மல்லி இப்போதும் என்னை கேலி செய்தது....
மல்லி தேவதைகளின் பூ .....!!
ஆமாம் ...ஆமாம் ..என்றேன் வழிந்து கொண்டே....!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்