இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தசாமி - கத்திரி தேவை சாமி

கந்தசாமி - இன்னொரு அந்நியன் + ஜென்டில் மேன் ஆக வந்திருக்க வேண்டிய படம். சுசி எதற்காக மூன்றரை மணி நேரம் படத்தை கொடுத்தார் என்று புரியவில்லை. பொறுமை கந்தசாமி-இனும் பெரிது என்று தெரிய வேண்டாமோ .? ஒரு படம் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும். மீறினால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்து காட்டு இந்த படம் , 'ஆறு' , 'காக்க காக்க ' எல்லாம் தோத்து போச்சு வேகத்துல. சில நேரம் கண்ணு வலிக்குது பாசு. ஸ்ரேயா ரொம்ப புடிச்சு போச்சோ ? ரொம்ப காட்டிட்டாரு காட்டு காட்டு-னு . எதுக்கு இவ்ளோ வேகம். டைரக்டர் -க்கு வயிறு சரி இல்ல போல ....சீக்கிரம் படத்த முடிச்சிட்டு பாத்ரூம் போகணும் போல-னு தோணுதா இல்லையா.......?? மனசு படத்தோட ஓட்டனும் அதுக்கு சில இடத்துல மெதுவா ஓடனும் . அவ என்ன சொன்னா-னு பக்கத்துல இருக்குற-ஆள்ட்ட கேட்டுட்டு திரும்பினா.... ஒரு பைட் சீன்-முடிஞ்சு பாட்டு ஓடி கிட்டுருக்கு...... பக்கத்துல ஒரு ஆள் என்னடானா....எப்போ விக்ரம்-எ காட்னாலும் சேவல் மாதிரி கூவ ஆரம்பிசுர்றான். நான் இவன பாப்பேனா.....இல்ல ஸ்ரேயா-வா பாப்பேனா....? சுசி எப்பவுமே லாஜிக்கான ஆளு. விரும்புகிறேன் , பைவ் ஸ்டார் , திருட்டு பயலே ,எல்லாம

நீ ,நான் மற்றும் ஒரு பாப்பா

மொட்டை மாடியில் ஒரு நாள் நீ காற்றுடன் மொக்கை போட்டு கொண்டிருந்தாயே ......பக்கத்து வீட்டு குட்டி பாப்பாவை தூக்கி கொண்டு மேலே வந்தேன் .....நீயும் அதை வாங்கி கொஞ்சுவாய் என்று ... நீ கொஞ்சுவதை ரசிக்கலாம் என்று.....பின்னே ஒரு புஜ்ஜுகுட்டி இன்னொரு புஜ்ஜுகுட்டியை கொஞ்சுவதை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது ........ ஆனால் நீ தலை தாழ்த்தி கொண்டாய் ........அதன் பின் நிமிர்ந்து கூட பார்க்க வில்லை .... வேண்டுமென்றே.........புரியாமல் திட்டி விட்டு கீழே போய் விட்டேன்...... இன்னொரு நாள் இன்னொரு முறை.....அதே குழந்தையை நீ கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னுள் ஒரு 'வேதியல் மாற்றம்'......இனம் புரியாததொரு .....IMPULSE அப்படியே உன்னை சேர்த்து இறுக்கி கொண்டு ஒரு போட்டோ எடுத்து கொள்ள தோன்றியது.....!!! அடியே 'தலை தாழ்த்தி' ....இப்போது புரிகிறது ....உன்னை........!!!

கிறுக்கி பற்றி கிறுக்கி....

எப்படிடா உன்னால் மட்டும் இப்படி கிறுக்கி தள்ள முடியுது......இரண்டாவது இருநூறு பக்க கவிதை நோட்டையும் விடாமல் படித்து முடித்த நண்பர் வட்டம்..... ??????? அவர்களுக்கு என்ன தெரியும் ....உனக்கும் எனக்கும் இடையில் எது நடந்தாலும் அது கவிதை தானென்று .....!!!!!!!!!!!!!!!!!

காதல் கொக்கைன்

இப்பொழுதெல்லாம் தினம் காலை எழும்போது மனம் அப்படி ஒரு பூ...பூக்கிறது .... எழ மனமில்லாமல் 'உன்னுடன்' பேசி கொண்டிருக்கிறேன்....நகைத்தபடியே... (அந்த வெள்ளை 'பொசுக் பொசுக் ' தலையணை தான் ...) எழுந்தாலும் கஞ்சா போட்டது போல வெறித்து கொண்டே உட்கார்ந்திருக்கிறேன் ..... ....உள்ளுக்குள் உன்னை புகைத்த படியே............ சாராயம்,கள்ளு,கஞ்சா இதெல்லாம் போதையாம்.....தடை செய்திருக்கிறார்கள் .....காதலிக்காத காத்தவராயன்-கள்.....காதலை தடை செய்யுங்கள் .....இல்லை இவளை தடை செய்யுங்கள் ....குறைந்த பட்சம் இவள் கண்ணையாவது...தடை செய்யுங்கள்......

பயம் உனக்கு வயம் எனக்கு

"உயரம் என்றால் பயம் எனக்கு ........விழுந்துடுவனோன்னு" அழகாக ...அபிநயத்தோடு ....குதூகலித்து பயந்தாய்.....நீ பயந்ததை பார்த்து நான் பயந்தேன் ..... நான் ' விழுந்து ' விடுவேனோ வென்று........!!!

சில் சில் ....எச்சில்

மதியம் நீ சாப்பிட ஆரம்பித்த பின்னே நான் டிபன் பாக்ஸ் திறக்க ஆரம்பிப்பேன் 'எடுத்துக்கோ ....!!' - நான் ஆணை இடுவேன் ....மெது வாக நான் சொல்லி நீ மறுத்து விட்டால்..... 'கையில் எச்சில் பண்ணிட்டனே ....நீயே எடுத்து...தா...'!! - நீ. 'பரவாயில்ல.... எடுத்துக்கோ..! ' ........................ 'அடுக்காக தானே லேட்டா ஓபன் பண்ணினேன்' - கடைசி வரி மட்டும் மனதுக்குள் சொல்லி கொண்டேன்.

ஆணுக்கும் நாணமுண்டு

தபூ சங்கர்- எழுதிய இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு துணை கவிதை எழுதியதும் ......... உன்னை பார்த்ததும் மூடி வைத்து கொள்வதுமாய் ....... பொறுக்க முடியாமல் நீ பலமுறை படிக்க கேட்டு கெஞ்சியும் நான் கொடுக்கவில்லை ..... அன்று தான் தெரிந்து கொண்டேன்.... ஆணுக்கும் நாணமுண்டு என்பதை..... இன்னொரு முறையும் கெஞ்ச மாட்டாயா.....???

பதுமை பித்தன்.

புத்தகங்களோடு சேர்த்து நீ அணைத்திருக்கும் டிபன் பாக்ஸ் பார்த்து 'ம்ம்...ஹூ.ம்ம்' பெருமூச்செறிந்தேன் .புரிந்தும் புரியாதது போல பொய் கோபத்துடன் கேட்கிறாய் ....'என்ன.....?' 'கொடுத்து வெச்ச டிபன் பாக்ஸ் என்றேன் ''ச்..சீ போடா எருமை மாடு ' வெட்கி மறைந்தாய் ...மறுநாளும் அதே டிபன் பாக்ஸ், புக்ஸ் ........அதே இடத்தில்.......என்னை பார்த்தவுடன் இறுக்கி கொள்கிறாய் ........(அ)னிச்சையாய்...!!!