உடலானந்தா..!!

மாமு ஒரு 'ராஜ மீன் கொத்திய' உள்ள விட்டுகினு குளிக்கலாம்ன்னு
பாத்து ரூம் குள்ளே போனேன் ..யாரும் பாத்துரகுடாதேன்னு....,
அங்க ஒரு 'ஆடி' ( கண்ணுக்கு போட்ட தான் மாமு அது கண்ணாடி..... இல்லனா வெறும் ஆடி...அது ஆடாம வெறுமனே நின்னா கூட )
பார்த்து...ஆடி போய்ட்டேன் .......(நான் அப்டியே shoccckkkk ஆயிட்டேன்.....!!)
பின்னே ஆதாம் வேஷத்துல பாதாம் பருப்பா சாப்பிட்டு வளர்ந்த ஒரு உருவத்த திடீர்னு பார்த்தா.......


(ஆடி-னு )சரியா தாண்டா... பேரு வச்சுருக்காணுவ நம்ம முன்னோர்-ன்னு முணுமுணுத்துட்டு.......மூச்ச பிடிச்சுகின்னு ஒரு meditation
போட்டுட்டு .......உர்ர்னு அந்த கண்ணாடிய வெறிச்சு பாத்துட்டு.....குழாயில கை வச்சா 'தண்ணி' க்கு பதிலா 'தத்துவமா' கொட்டுது.......
நாபி கமலத்துள இருந்து.......


உடல் ....அது ஆன்மாவின் மடல். தன்னிகரில்லா கடல்...!!
ள்ளுலகத்தை ஒட்டு கேக்கும் காது ம டல்....!!
உ. ...டல்.... உடற்பயிற்சி இல்லாவிட்டால் டல் ஆகி விடும் திடல்...!!
உற்சாகம் நாடல்.....உச்சம் தொடல்.....உண்மை தேடல்.......உள்ளுணர்ச்சியுடன் ஊடல்...!!
- உடான்ஸ் உடலானந்தா.......!!!
கொஞ்சம் கத்தி சொல்லிட்டேன் போல.......
பக்கத்துக்கு ரூம் பாத் ரூம்ல ஒருத்தன் வெறியோட அடிதொண்டையில இருந்து காரி துப்பினான் பாரு........!!
இறங்கிடுச்சி.......நாபி கமலா...!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்