Iraivi - இறைவி review - Nice movie

எஸ் ஜே சூர்யாவின் புதிய பரிமாணம் .

இசை படத்தின்  தோல்வி கூட அவரை இவ்வளவு செதுக்கி இருக்கலாம்.

 பெண்ணை  கர்ப்பமாக  ஆக்குவதில் அற்பமாக சிந்தித்து கொண்டிருந்தவரை  சிற்பமாக செதுக்கி கர்ப்ப கிரகத்தில் வைத்திருக்கிறார் சொற்ப படங்களே இயக்கி இருக்கும் கார்த்தி சுப்பராஜ் .

விஜய் சேதுபதி சைடு ஆர்டிஸ்ட் . ரொம்ப பெரிய மனது வேண்டும். இவ்ளோ பிஸியான ஹீரோவான பின் ஒரு வாய்ப்பிழந்த ஹீரோ கம் டைரக்டர் -க்கு இவ்வோளோ space  கொடுத்ததற்கு .

ஆ...ண் ..!!! நெடில் !
 பெண்!! குறில் ...!
ஆண் உணர்ச்சிவயப்படும் ஜந்து ...
பெண் அந்த ஜந்தை handle பண்ணும் அழகிய ஜந்து ...

கமாலினி முகர்ஜி சூப்பர் .....
அஞ்சலி யம்மி ....

சோகமுடிவுன்னு முடிவு பண்ணியாச்சு......அப்புறம் என்ன பாலா மாறி கொதறி எடுத்து அழுக வச்சு வீட்டுக்கு அனுப்பிரனும் ...எலேய் அது நம்ம கடமை இல்லியா...?

சிலை ஸ்தபதி பத்தி கொஞ்சம் detail  போயிருந்தா பாக்குற ரசிகன் அசந்து போயிருப்பான் . அவ்ளோ மேட்டர் இருக்கு . But  சிம்ப்ளா ....சிலை ...பழசு ....திருடுறோம் ....முடிஞ்சுது...!! என்ன சுப்பு ....?

எழுத்தாளர் சாரு நிவேதிதா, மிகவும் காட்டமாக தனது வெப்சைட்டில் இறைவி குறித்து கருத்து கூறியுள்ளார். 

"கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்". இவ்வாறு சாருநிவேதிதா தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/charu-nivedita-slams-karthick-subburaj-s-iraivi-film-255241.html

நான் நினைத்த விமர்சனம் : tamil.filmibeat published like my mind voice.

இறைவி.வெற்றி பெறாத திரை முயற்சிகளால் குடியே கதியாகக் கிடக்கும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவின் மனைவி கமலினி... 
அந்த சூர்யாவின் நட்புக்காக ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு கொலையைச் செய்து சிறைக்குப் போகும் விஜய் சேதுபதியால் நிர்க்கதியாகத் தவிக்கும் அஞ்சலி....

 கைம்பெண்ணாக தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ளப் போராடும் பூஜா திவாரியா.. 
கணவனின் ஆதிக்கம் தந்த அழுத்தத்தால் கோமாவுக்கே போகும் வடிவுக்கரசி... இந்த இறைவிகளைச் சுற்றிச் சுழல்கிறது கதை. கதையின் மையம் இந்தப் பெண்கள்தான் என்றாலும், பெரும் பகுதி காட்சிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் ஆண்கள்தான் என்பது நிஜத்தைப் போலவே திரையிலும் தொடரும் முரண். 
கோடம்பாக்கமே பேய் மோகத்திலும், அரைவேக்காட்டு நகைச்சுவை வியாபாரத்திலும் விழுந்து கிடக்க, என்வழி தனிவழி என புதிய முயற்சியைத் தொடர்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்காக ஒரு ஷொட்டு... 
ஆனால் ஒரு குட்டும் வைக்க வேண்டும். 
எங்கு முடிக்க வேண்டுமோ அங்கே முடிக்காமல் ஜவ்வாக காட்சிகளை இழுத்ததற்காக! திரைக்கதைக்கான பிள்ளையார் சுழி போடும்போதே இந்த சினிமா டைரக்டர் வேடம் எஸ் ஜே சூர்யாவுக்குத்தான் என முடிவு செய்துவிட்டு எழுதியிருக்கிறார் கார்த்திக். 

அந்த நம்பிக்கையை அப்படிக் காப்பாற்றியிருக்கிறார் சூர்யா. எப்பேர்ப்பட்ட நடிகன்... தன் பலம் தனக்கே தெரியாமல் கண்டபடி நடித்து வந்திருக்கிறார் இந்த மனிதர்! 

உண்மையான குடிபோதைக்கும், குடித்த மாதிரி நடிக்கும் போதைக்குமான வித்தியாசத்தை இத்தனை நுணுக்கமாக எந்த நடிகரும் வெளிப்படுத்தியதில்லை.

Read more at: http://tamil.filmibeat.com/reviews/iraivi-movie-review-040382.html




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்