இடுகைகள்

Introduction

செமஸ்டர் எக்ஸாம் வந்தால் போதும்....எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலி .... combine study - ன்ற பேரு ல ஒரே லூட்டி தான்...... A short introduction...!! கார்த்திக் @ கடியான் ( ஜோக் எனும் பெயரால் கொஞ்சம் kooda இறக்கம் இல்லாமல் கொடூரமாக கடிப்பான்.....அதுக்கு அந்த நாயே தேவலாம் போல தோனும். But good boy & (Education boy- ஷேன் நல்லா படிக்கிற பசங்கள அப்புடித்தான் சொல்லுவான்...) ரவி @ கிளி @ ஊமை குசும்பன் ( பார்க்க ரொம்ப அமைதி . ஆனால் திடீரென்று கமெண்ட் அடிச்சால் எல்லாம் கதி கலங்கி ஒரு நிமிடம் அமைதி யாகி....பின் வயிறு வெடிக்க சிரிப்போம் . சைலென்ட் கில்லர் ) செந்தில் நாதன் @ சிங்கம்புலி .இவனை பற்றி ஒரு புக் எழுதினாலும் பத்தாது....!நம்ம ஹீரோ கள்ள 'முக்கி'யமானவர்....!! குரு @ கும்மி @ தூங்கமூஞ்சியான்.....காலையிலே பத்தரைக்கு துயில் எழுவாறு ...சாப்பிடுவாரு....தூங்குவாரு...thirumba மதியம் மூணு மணிக்கு சாப்பிட எழுவாறு...தூங்குவாரு....!!நைட் .....appavum தூங்குவாரு.. கடி,கும்மி ,கிளி ,சிங்கம் இது நாளும் தான் ரூம் மேட்டு கள். மத்தது கல்லாம் ஒண்ட வந்த பிடாரிகள் . பிடாரி 1: நான் @muscle man ( கொஞ்சம

அரியும் ஹரியும்

ராமன் ஏன் காட்டுக்கு போனான் ? discussion ஓடிகிற்றுன்தது....!! மாப்ளே ....கல்யாணமான புதுசு .... டீனேஜ் வேற...காட்லே போய் ஹனி மூன் கொண்டாட கிளம்பிருப்பாங்க .....நம்ம இலட்சு....இது புரியாம கரடியாட்டம் வில்ல தூக்கிகினு நானும் அண்ணாகூட போவேன்னு அடம் பிடிச்சு அப்பீட்டு ஆயிகிச்சு....அவனுக்கு பொண்டாட்டி தொல்ல...சரி .....அந்தம்மாவாவது நானும் என் வீட்டுக்காரரோட தான் இருப்பேன்னு பேக்-க தூக்கி கினு கிளம்பிருக்க வேணாம்...? ஒழிஞ்சா போதும்னு விட்ருக்கும்(பக்கத்துல சிவனே னு உக்காந்து , பேந்த பேந்த முழிச்சி கிட்டு நாங்க பேசுறத புரிஞ்சுக்க ட்ரை பண்ணிகிட்டிருந்த ஹரி ய காட்டி ) இவன் பொண்டாட்டியும் இப்படிதாண்டா... இருக்கும்....என்று வழக்கம் போல உசுபேத்தி விட்டான் சந்தானம் . கடுப்பான ஹரி ....உன் பொண்டாட்டி தாண்டா 'ராமரு கூட ஓடி போவா' என்று காட்ட .......ஒரே சிரிப்பு மழை.....!! ஹரி பேரு தான் ஹரியே தவிர ஹரி யை பற்றி ஒன்றும் அறியேன்...!! பாத்ரூம் பழிவாங்கல்....!! ஹரி எப்போ பாத்ரூம் போனாலும் புக்-கொடுத்தான்போவாரு....! உள்ளே போய் என்ன பண்ணுவாருனு ஊருக்கே தெரியும்....! ஆனா ஊருக்கே தெரியும்னு அவருக்கு தெரி

ஹரியும் நானும்

என் நண்பன் ஹரி ஒரு விவகாரமான ஆள். தீவிர விஜய் ரசிகன் வேற..... "ஜெயகாந்தன் மாதிரி ஆவணும் மாப்ள......" - அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு கைய கடிச்சுகுவாபுல ...... ஒரு நாள் நானும் பொறுக்க முடியாம.....கேட்டேன். "மாப்ளே...ஜெயகாந்தன் கதை எல்லாம் படிச்சுருக்கியா ?" ஒ...அவரு கதை எல்லாம் எழுதுவாரா மாப்ள ? நான்- 'டேய் பின்ன ஏண்டா ஜெயகாந்தன் மாதிரி ஆக ஆசை பட்டே...? ஹரி - அவரு மீசை முறுக்கி விட்டு திரிவார்ல்ல ........அதே மாறி.....மாப்ள..." சொல்லிட்டு வெக்கம் வேற .....!! ஒரு நாள் ராத்திரி 2 மணிக்கு போன். நான் - " என்னடா மாப்ள இந்நேரத்துல ? " அவன் 2 டைட்டில் செலக்ட் பண்ணி இருக்கானாம் ...... புக் எழுத...... போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி...? விஜய் படம் பார் ...!! ( தயவு செய்து முதல் கேள்வியின் பதிலாக இரண்டாவது வரியை எடுத்து கொள்ள வேண்டாம்.) மாப்ள "அரிது அரிது...... ஹரியாய் பிறப்பது அரிது "- அப்பிடினேன்...........!! பயபுள்ள-க்கு மண்ட முடியெல்லாம் நட்டு கிச்சு போல....... தேங்க்ஸ்-டா........மாப்ள ...உன்ன மாதிரி encourage பண்ண ஆள் கிடைச்சிருந்தா

கந்தசாமி - கத்திரி தேவை சாமி

கந்தசாமி - இன்னொரு அந்நியன் + ஜென்டில் மேன் ஆக வந்திருக்க வேண்டிய படம். சுசி எதற்காக மூன்றரை மணி நேரம் படத்தை கொடுத்தார் என்று புரியவில்லை. பொறுமை கந்தசாமி-இனும் பெரிது என்று தெரிய வேண்டாமோ .? ஒரு படம் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும். மீறினால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்து காட்டு இந்த படம் , 'ஆறு' , 'காக்க காக்க ' எல்லாம் தோத்து போச்சு வேகத்துல. சில நேரம் கண்ணு வலிக்குது பாசு. ஸ்ரேயா ரொம்ப புடிச்சு போச்சோ ? ரொம்ப காட்டிட்டாரு காட்டு காட்டு-னு . எதுக்கு இவ்ளோ வேகம். டைரக்டர் -க்கு வயிறு சரி இல்ல போல ....சீக்கிரம் படத்த முடிச்சிட்டு பாத்ரூம் போகணும் போல-னு தோணுதா இல்லையா.......?? மனசு படத்தோட ஓட்டனும் அதுக்கு சில இடத்துல மெதுவா ஓடனும் . அவ என்ன சொன்னா-னு பக்கத்துல இருக்குற-ஆள்ட்ட கேட்டுட்டு திரும்பினா.... ஒரு பைட் சீன்-முடிஞ்சு பாட்டு ஓடி கிட்டுருக்கு...... பக்கத்துல ஒரு ஆள் என்னடானா....எப்போ விக்ரம்-எ காட்னாலும் சேவல் மாதிரி கூவ ஆரம்பிசுர்றான். நான் இவன பாப்பேனா.....இல்ல ஸ்ரேயா-வா பாப்பேனா....? சுசி எப்பவுமே லாஜிக்கான ஆளு. விரும்புகிறேன் , பைவ் ஸ்டார் , திருட்டு பயலே ,எல்லாம

நீ ,நான் மற்றும் ஒரு பாப்பா

மொட்டை மாடியில் ஒரு நாள் நீ காற்றுடன் மொக்கை போட்டு கொண்டிருந்தாயே ......பக்கத்து வீட்டு குட்டி பாப்பாவை தூக்கி கொண்டு மேலே வந்தேன் .....நீயும் அதை வாங்கி கொஞ்சுவாய் என்று ... நீ கொஞ்சுவதை ரசிக்கலாம் என்று.....பின்னே ஒரு புஜ்ஜுகுட்டி இன்னொரு புஜ்ஜுகுட்டியை கொஞ்சுவதை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது ........ ஆனால் நீ தலை தாழ்த்தி கொண்டாய் ........அதன் பின் நிமிர்ந்து கூட பார்க்க வில்லை .... வேண்டுமென்றே.........புரியாமல் திட்டி விட்டு கீழே போய் விட்டேன்...... இன்னொரு நாள் இன்னொரு முறை.....அதே குழந்தையை நீ கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னுள் ஒரு 'வேதியல் மாற்றம்'......இனம் புரியாததொரு .....IMPULSE அப்படியே உன்னை சேர்த்து இறுக்கி கொண்டு ஒரு போட்டோ எடுத்து கொள்ள தோன்றியது.....!!! அடியே 'தலை தாழ்த்தி' ....இப்போது புரிகிறது ....உன்னை........!!!

கிறுக்கி பற்றி கிறுக்கி....

எப்படிடா உன்னால் மட்டும் இப்படி கிறுக்கி தள்ள முடியுது......இரண்டாவது இருநூறு பக்க கவிதை நோட்டையும் விடாமல் படித்து முடித்த நண்பர் வட்டம்..... ??????? அவர்களுக்கு என்ன தெரியும் ....உனக்கும் எனக்கும் இடையில் எது நடந்தாலும் அது கவிதை தானென்று .....!!!!!!!!!!!!!!!!!

காதல் கொக்கைன்

இப்பொழுதெல்லாம் தினம் காலை எழும்போது மனம் அப்படி ஒரு பூ...பூக்கிறது .... எழ மனமில்லாமல் 'உன்னுடன்' பேசி கொண்டிருக்கிறேன்....நகைத்தபடியே... (அந்த வெள்ளை 'பொசுக் பொசுக் ' தலையணை தான் ...) எழுந்தாலும் கஞ்சா போட்டது போல வெறித்து கொண்டே உட்கார்ந்திருக்கிறேன் ..... ....உள்ளுக்குள் உன்னை புகைத்த படியே............ சாராயம்,கள்ளு,கஞ்சா இதெல்லாம் போதையாம்.....தடை செய்திருக்கிறார்கள் .....காதலிக்காத காத்தவராயன்-கள்.....காதலை தடை செய்யுங்கள் .....இல்லை இவளை தடை செய்யுங்கள் ....குறைந்த பட்சம் இவள் கண்ணையாவது...தடை செய்யுங்கள்......